சென்னை குண்டுவெடிப்பு எதிரொலி: 5 அடுக்கு பாதுகாப்பில் கோயம்பேடு பஸ் நிலையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்டிரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை குண்டு வெடித்தது. இதையடுத்து சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலும், எழும்பூர், திருச்சி, கோவை, மதுரை உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Chennai bomb blasts: Security tightened in Koyambedu Bus stand

பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

5 அடுக்குப் பாதுகாப்பு

இதேபோல், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிசிடிவி கேமரா கண்காணிப்பு

கோயம்பேடு பஸ்நிலையத்தில் 66 ரகசிய கேமராக்களும், 5 சுழலும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

உடமைகள் பரிசோதனை

பஸ் நிலையத்தின் 8 வாயில்களும் மூடப்பட்டுள்ளன. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவருடைய உடமைகளும் பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன்பிறகே அவர்கள் பஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அங்கு வரும் அனைத்து பஸ்களிலும் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்துகிறார்கள். குண்டு எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகே பஸ்கள் வெளியே சொல்ல அனுமதிக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+