20 ஆண்டுகளுக்குப் பின் ஈரமான செப்டம்பர்... இரவோடு இரவாக சென்னையை நடுங்க வைத்த மா மழை!
சென்னை : சென்னையில் நேற்றிரவு காற்றுடன் பெய்த கனமழை 82 மி.மீ அளவிற்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். இன்றும் மழை நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் மாதத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதங்களில் லேசான அளவு மழை பெய்யும், புரட்டாசி பிறந்த உடனே மழைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிடும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் மழையுடனே தொடங்கியது. சென்னைவாசிகளை இந்த செப்டம்பர் மாத மழை புழுக்கத்தை குறைத்து குளிர்ச்சியடைய வைத்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு மற்றும் அதிகாலையில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை மழை
வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போல நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட சென்னையில் நேற்றிரவு 10 மணியில் தொடங்கி நள்ளிரவு வரை நிதானமாக மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. நேற்றிரவு அதிகபட்சமாக 82 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெமர்மேன் பிரதீப் கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பின் மழை
சென்னையில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் செப்டம்பர் மாதத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2ம் தேதி 73 மிமீ மழை அளவு பதிவான நிலையில் 28ம் தேதி இரவு தொடங்கி அதிகாலை வரை 82 மிமீ மழை பதிவானதாக அவர் தனது தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மழை அளவு
29ம் தேதி 8.30 மணிவரை பதிவான மழை அளவு மி.மீட்டரில்
அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி - 97
நுங்கம்பாக்கம் - 82
மீனம்பாக்கம் - 77
செம்பரம்பாக்கம் - 77
காஞ்சிபுரம் - 50

ஈரமான செப்டம்பர்
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு தென்மேற்கு பருவகாலமான செப்டம்பர் மாதத்தில் அதிக பட்ச மழை பதிவாகியுள்ளாத கூறும் வெதர்மேன், இது ஈரமான செப்டம்பர் மாதம் என்று பதிவிட்டுள்ளார். 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 314.50 மிமீ மழை பதிவானது. செப்டம்பர் 12ம் தேதி 1996ம் ஆண்டு மிக அதிகபட்சமாக 167 மிமீ மழை பெய்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மழை நீடிக்கும்
2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் 286 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதுவரை 296 மிமீ மழை சென்னையில் பதிவாகியுள்ளது. இது ஈரமான செப்டம்பர் மாதம் என்றும் பதிவிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப். இன்று இரவும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications