பச்சையப்பன் கல்லூரியில் பயங்கர மோதல்... ஒரு மாணவரை 5 மாணவர்கள் விரட்டி விரட்டி வெட்டினர்
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவரை 5 மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அரிவாளால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் கல்லூரி நடைபெற்றது. அப்போது கல்லூரிக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த 5 மாணவர்கள் கொண்ட கும்பல் ஒன்று, சதீஷ்குமார் என்ற மாணவரை சரமாரியாக வெட்டியது.
இதில் சதீஷ்குமார் தலை, கை உட்பட பல இடங்களில் பலத்த காயமடைந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் பின்னர் தப்பிச்சென்றது. பலத்த காயமடைந்த சதீஷ்குமார் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அரிவாளால் வெட்டிய மாணவர்களைத் தேடி வருகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.