ஓடும் பஸ்ஸில் மாணவர்கள் கலவரம்- சென்னையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil

ஓடும் பேருந்தில் இரு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டதில் பேருந்து கண்ணாடி அடைத்து உடைக்கப்பட்டது. காயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சுங்கச்சாவடியில் இருந்து திருவான்மியூருக்கு இன்று நண்பகலில் 6-டி என்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மாநில கல்லூரி மாணவர்களும், மற்றொரு கல்லூரி மாணவர்களும் வந்துள்ளனர்.
பேருந்து மெரினா கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது இரு பிரிவு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்து கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மோதல் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications