பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை மாநகராட்சி.. உதவி எண் அறிவிப்பு!
சென்னை: பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மழை, வெள்ள பாதிப்பை சமாளிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது..
கடந்த டிசம்பர் மாதம், கன மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. பலர் பாதிக்கப்பட்டு, வீடு உடமைகளை இழந்தனர். அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இன்று கேரளாவில் கால் பதித்துள்ளது. அடுத்த சில நாட்களில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தாக்கம் இருக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநகராட்சி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மழை வெள்ள பாதிப்பு குறித்த புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
தேங்கும் நீரை அகற்ற, 600 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாயும் மரங்களை அகற்ற தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. 15 ஆயிரம் ஊழியர்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications