குடி போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் நடிகர் ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடி போதையில் ஜெய், காரை ஓட்டி வந்து, கடந்த மாதம் 21ம்தேதி அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அக்டோபர் 3ம் தேதி சைதாப்பேட்டை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் ஜெய் நேரில் ஆஜரானர்.

பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் ரகசியமாக கோர்ட்டுக்குள் வந்துவிட்டு வெளியேறினார் ஜெய். இது தொடர்பான வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என்பதால், நடிகர் ஜெய், கோர்ட்டுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜெய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம். நாளை அவர் ஆஜராக கோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications