தீயை அணைப்பதில் தாமதம் ஏன்? சென்னை மாவட்ட கலெக்டர் விளக்கம்
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பற்றி எரியும் தீ இன்று இரவிற்குள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தாமதம் ஏற்படுவது ஏன் என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் பரபரப்பாக இருக்கும் தி. நகரில் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 15 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் நிலையில் இன்று மாலை அக்கட்டடத்தின் 2, 3, மற்றும் 4 தளத்தில் மீண்டும் தீ பற்றி எரிகிறது.

இந்த தீ விபத்தால் 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். சுமார் 15 மணி நேரமாக தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் உஸ்மான் சாலை பக்கம் பொதுமக்கள் வரவேண்டாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப்பகுதியில் போக்குவர்துத நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், கட்டடத்தின் அமைப்பு காரணமாகவே தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தீயணைக்கும் பணியில் 125 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10 நிமிடத்துக்கு ஒரு லாரி தண்ணீர் என்ற வகையில், 50 லாரிகளில் தீயணைக்கும் பணிக்காக தண்ணீர் எடுத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்தால் தி.நகர் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது என்றார். பற்றி எரியும் தீ இன்று இரவிற்குள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications