ஸ்வாதி மாதிரி கொன்னுடுவேன்: ஃபேஸ்புக் தோழியை மிரட்டிய என்ஜினியர்
சென்னை: ஃபேஸ்புக் மூலம் சென்னையை சேர்ந்த என்ஜினியர் சாமுவேல் பெண்களை எப்படி மடக்கினார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வாதி போன்று கொலை செய்துவிடுவேன் என ஒரு பெண்ணை மிரட்டியும் உள்ளார்.
சென்னையை சேர்ந்த என்ஜினியர் சாமுவேல் ஃபேஸ்புக் மூலம் 11 பெண்களிடம் நெருங்கிப் பழகி அவர்களை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் , வீடியோ எடுத்து மிரட்டி போலீசில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது,
சென்னையில் உள்ள பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர் சாமுவேல். ஆனால் அவர் தன்னை சாம் என்றே குறிப்பிடுகிறார். ஃபேஸ்புக் பிரியரான அவருக்கு ஏகப்பட்ட தோழிகள் உள்ளனர்.
ஃபேஸ்புக் மூலம் பெண்களுடன் சாட்டிங் செய்து பழக்கமாகி பின்னர் நேரில் சந்தித்துள்ளார். நேரில் சந்தித்து நெருங்கிப் பழகி அதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை வைத்து பெண்களை மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார்.
அவரால் 11 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் தனது செல்போனில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் அவருடன் பழகிய பெண்கள் தங்களின் புகைப்படங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர் என்றனர்.
சாமுவேல் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
சாமுவேல் என்னை பின்தொடர்ந்து காதலிப்பதாக தெரிவித்தான். ஒரு மாதமாக என்னை தொந்தரவு செய்தான். நான் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினான். அவன் சொன்னது போல கையை அறுத்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டான். இதனால் அவனுடன் பழக ஆரம்பித்தேன். பல இடங்களுக்கு சென்றோம். அப்போது ஒரு நாள் என்னுடைய செல்போனில் பேசிய பெண் ஒருவர், சாமுவேலை நம்பாதே. அவனால் ஏற்கனவே நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு ஒருநாள் சாமுவேலின் போனை எடுத்துப் பார்த்தேன். அதில் பல பெண்களின் ஆபாசமான புகைப்படங்கள் இருந்தன. இதன்பிறகு அவனிடமிருந்து விலகினேன். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் என்னை போனில் மிரட்டத் தொடங்கினான். 10 லட்சம் ரூபாய் கேட்டான். பணத்தை தரவில்லை என்றால் சுவாதியைப் போல கொலை செய்துவிடுவதாக கூறினான். இதற்கிடையில் வாட்ஸ்அப் குரூப்பில் என் புகைப்படம் உள்பட பல பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications