அட்லாண்டிக் கடலில் வாழும் அரிய வகை மீன்கள் சென்னை மீனவர் வலையில் சிக்கியது!
சென்னை மீனவரின் வலையில் சில அரிய வகை மீன்கள் சிக்கின.
சென்னை : அட்லாண்டிக் மற்றும் தென் பசிபிக் கடல் பகுதிகளில் வாழும் அரிய வகை மீன் சென்னை மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.
க்னைப்டூத் டாக்பிஷ் எனப்படும் வகையைச் சேர்ந்த மீன்கள் அட்லாண்டிக் கடல் பகுதியின் கிழக்குப் பகுதியிலும், தென் பசிபிக் கடல் பகுதியிலும் வாழக் கூடியது. சுறா மீன்களைப் போன்று அச்சுறுத்தும் வகையிலான கூர்மையான பற்களைக் கொண்டவை இந்த மீன்கள்.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரது வலையில் இந்த மீன்கள் சிக்கியுள்ளன. மற்ற மீன்களில் இருந்து இவை வித்தியாசமாகக் காணப்பட்டதால், இவற்றை வாங்க வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
எனவே, இந்த மீன்கள் நேரடியாக சுறா மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் துறைக்கு அனுப்பப்பட்டது. ஒவ்வொரு மீன்களும் குறைந்தது பத்து கிலோ எடையுடன் இருப்பதால், அவற்றில் தேவையான எண்ணெய்யை எடுத்து விட்டு மீதமுள்ள சதைப்பகுதி குப்பையில் போடப்பட்டு விடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications