செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிய ஹைகோர்ட்டில் மனு
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடுவதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் பெய்த பெருமழையின்போது, முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதாகவும், இதனால் நகரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்து, உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் அதிகரித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகளும், சில ஊடங்களும் குற்றம்சாட்டியுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த திமுக கோரிக்கைவிடுத்து ஆளுநரிடம் மனு அளித்ததோடு, சமீபத்தில் சென்னையில் பெரிய பேரணியை நடத்தியது.
இந்நிலையில், சென்னை ஹைகோர்ட்டில், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், இன்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் பற்றி விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனர் வரை மனு கொடுத்து ஓய்ந்துவிட்டதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆறுமுகம், தனது மனுவில் கூறியுள்ளார்.
ஆறுமுகத்தின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ள ஹைகோர்ட், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications