ரத்தம் படிந்த பெண்கள் உள்ளாடை, ரத்தக்கறையுடன் கால்தடம்.. காட்டேரி பீதியில் சென்னை மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களின் உள்ளாடைகள் ரத்தக்கரையோடு கிடந்ததாலும், 13 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்ததாலும் ரத்தகாட்டேரி நடமாட்டம் இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர், சென்னை, எழில் நகர் பகுதி மக்கள்.

சென்னை துரைப்பாக்கம் எழில்நகர் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 8,027 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 703 குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ரத்தக்காட்டேரி பீதி

ரத்தக்காட்டேரி பீதி

மீதம் உள்ள வீடுகள் காலியாக உள்ளன. இவற்றில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இங்கு, இரவில் பேய்கள், ரத்தக்காட்டேரி உலாவுவதாக பீதி நிலவுகிறது.

சிறுமி ரத்தத்தை குடித்ததா காட்டேரி?

சிறுமி ரத்தத்தை குடித்ததா காட்டேரி?

நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக நடந்து சென்ற 13வயது சிறுமி ரத்தக்காட்டேரி அடித்து ரத்தம் குடித்ததாகவும் மயங்கி கிடந்த அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.

உள்ளாடைகளில் ரத்தம்

உள்ளாடைகளில் ரத்தம்

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு பெண்கள் உள்ளாடைகள் ரத்தக்கரையோடு கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். ரத்தக்கறை படிந்த கால்தடங்களும் காணப்பட்டன. ஆனால் 13 வயது சிறுமி குறித்து துப்பு கிடைக்கவில்லை.

மக்கள் நடமாட்டம் இல்லை

மக்கள் நடமாட்டம் இல்லை

அப்பகுதியில் யாருக்கும் காலில் அடிபட்டு இருக்கலாம் அவர்கள் துணியை எடுத்து ரத்ததத்தை துடைத்து போட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆயினும் ரத்தக்காட்டேரி பயத்தால் இரவில் அங்கு நடமாடவே மக்கள் அஞ்சுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+