மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Recommended Video

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கப்படுகிறது என்று நீதிபதி துரைசாமி அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று (20ம் தேதி) வரையில் இடைக்கால தடை விதித்திருந்தது ஹைகோர்ட். இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.

தகுதி நீக்கம் உத்தரவு தங்களுக்கு நேரில் தரப்படவில்லை என்றும், பதிலளிக்க அவகாசம் தரப்படவில்லை என்றும், தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அரசை காப்பாற்ற சபாநாயகர் முயல்வதாகவும், 18 பேரின் வழக்கறிஞரான துஷ்யந்த் தவே வாதிட்டார். இதை கேட்டறிந்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னதாக சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்க ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தால் அதை ஏற்க தயார் என உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் 2 வாரங்களுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறப்போவதில்லை. இதனால் ஆட்சிக்கு 2 வார காலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications