கருணாநிதி குறித்து அவதூறு.. எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பாக எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, திமுக தலைவர் கருணாநிதி குறித்து டிவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். எச் ராஜாவின் அந்த டிவிட்டர் பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

எச் ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அவரது கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக எச் ராஜா மீது திமுகவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் எச் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு பேசிய வழக்கில் எச் ராஜா மீது வழக்கு பதிவு செய்ய நொளம்பூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications