புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவில் அமைக்க வேண்டும்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்பநல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் எவ்வளவு குடும்ப நல நீதிமன்றங்கள் தேவை என்பன போன்ற விவரங்களுக்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு பதிவாளரின் பரிந்துரையின் பேரில் 4 புதிய குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க பரிசீலனை செய்வதாக கூறியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குடும்ப பிரச்சினைகள் சமூக பிரச்சினைகளாக மாறி வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி கிருபாகரன் தற்போதுள்ள குடும்ப சல நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
எனவே புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு நீதிபதி ஒத்திவதை்தார்.












Click it and Unblock the Notifications