புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவில் அமைக்க வேண்டும்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்பநல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் எவ்வளவு குடும்ப நல நீதிமன்றங்கள் தேவை என்பன போன்ற விவரங்களுக்கு பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு பதிவாளரின் பரிந்துரையின் பேரில் 4 புதிய குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க பரிசீலனை செய்வதாக கூறியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குடும்ப பிரச்சினைகள் சமூக பிரச்சினைகளாக மாறி வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி கிருபாகரன் தற்போதுள்ள குடும்ப சல நீதிமன்றங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.
எனவே புதிய குடும்ப நல நீதிமன்றங்களை விரைவாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு நீதிபதி ஒத்திவதை்தார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications