திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளரின் பி படிவத்தில் இருப்பது ஜெ. கைரேகையா? ஹைகோர்ட் நீதிபதி கேள்வி
திருப்பரங்குன்றம் தேர்தல் அதிமுக வேட்பாளரின் பி படிவத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா என ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ருப்பரங்குன்றம் தேர்தல் அதிமுக வேட்பாளரின் பி படிவத்தில் இருப்பது ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா என ஹைகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் திருப்பரங்குன்றம் வேட்பாளரின் தேர்தல் ஆணைய பி படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம்பெற்றிருந்தது. ஜெயலலிதாவின் கைரேகை இடம்பெற்றதால் அவருக்கு என்ன ஆனதோ என பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் கை வீக்கமாக உள்ளது. இதனால் அவரால் பேனா பிடித்து கையெழுத்து போட முடியாத நிலை உள்ளதால் கைரேகை வாங்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்து சரவணன் தேர்தல் ஆணைய பி படிவத்தில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதாவின் கையெழுத்து குறித்து வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி படிவத்தில் உள்ள ஜெயலலிதா கைரேகை உண்மையா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதன்மை செயலாளர் வில்ஃபர்டு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications