நிபந்தனைகளை பாரதிராஜா நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்.. ஹைகோர்ட் கேள்வி
தினமும் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என்று 2வது முறையாக முன்ஜாமீன் கோரியது பற்றி இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தினமும் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என்று 2வது முறையாக முன்ஜாமீன் கோரியது பற்றி இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் கொடுத்தபோது கீழ் நீதிமன்றத்தை பாரதிராஜா அணுகவில்லை என கூறப்படுகிறது. சென்னையில் ஜனவரி 18ம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா பங்கேற்று பேசினார்.
அப்போது, இந்து மத கடவுகளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்த அவர், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் ஆவேசமாக பேசினார்.

இந்து மக்கள் முன்னணி புகார்
இதையடுத்து, இரு பிரிவினரிடையே வன்முறையை ஏற்படுத்தும் வகையில் பாரதிராஜா பேசியதாக இந்து மக்கள் முன்னணி சார்பில் வடபழனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பாரதிராஜா மனு
அதன் அடிப்படையில், வடபழனி போலீசார் பாரதிராஜா மீது இரு பிரிவினருக்கிடையே பிரச்சனையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நிபந்தனை ஜாமீன்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம் பாரதிராஜாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார். மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீனை பெற்று கொள்ளலாம் என்றும் 3 வாரம் தினமும் வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

ஜாமீன் பெறவில்லை
இந்த முன்ஜாமீனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் பெற்று கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் பாரதிராஜா 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்ஜாமீனை பெறவில்லை.

அதே நீதிபதி
எனவே 2வது முறையாக முன்ஜாமீன் வழங்கக் கோரி புதிய மனு ஒன்றை பாரதிராஜா தாக்கல் செய்தார். இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

என்ன தயக்கம்?
அப்போது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பாரதிராஜா நிறைவேற்றுவதில் என்ன தயக்கம் என்றும் அவர் காட்டமாக கேட்டார்.

பாரதிராஜாவுக்கு கேள்வி
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்த முன்ஜாமீனை ஏன் பெறவில்லை என்றும் பாரதிராஜாவின் வழக்கறிஞரிடம் கேட்டார் நீதிபதி. இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவிடம் விளக்கம் கேட்டு பதிலளிப்பதாக வழக்கறிஞர் கூறியதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications