சொத்துக் குவிப்பு வழக்கு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு
சொத்துக் குவிப்பு வழக்கில் புகார் கூறப்பட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் பால்வளத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி வருமானத்தக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,1996-ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி . திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த காலத்திருந்து விசாரணை நடத்த வேண்டும். எஸ்பி அந்தஸ்துக்கு இணையான ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 3-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications