சென்னை விடாமல் கொட்டிய மழையால் ஸ்தம்பித்தது போக்குவரத்து... வீடு திரும்ப முடியாமல் மக்கள் அவதி
Recommended Video
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 தினங்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் இன்று மாலை கருமேகங்கள் சூழ பலத்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து முகப்பேர், அண்ணா நகர் , அம்பத்தூர், தியாகராய நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம்
குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதுமட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெப்பசலனத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இதனால் நாளையும் மழையை எதிர்ப்பார்க்கலாம் என்றே தெரிகிறது. வேலூரில் மழை: வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு சென்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்தம்பித்தது போக்குவரத்து
விடாமல் மழை கொட்டி வருவதால் பல இடங்களில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் இன்னும் திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
மகிழ்ச்சி
காலை வேளையிலும் நல்ல இதமான வானிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த மழையால் வெக்கையின்றி குளிர்ச்சி நிலவுகிறது.