சென்னை கல்லூரி வெடிகுண்டு மிரட்டலில் திடீர் திருப்பம்: அதே கல்லூரி மாணவி கைது
சென்னை: சென்னை ஜெயின் கல்லூரி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார், 14க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டது. ஆனபோதும், தொடர்ந்து போலீசாருக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை குண்டுவெடிப்பிற்கு அடுத்த நாளான மே 2ம் தேதி தியாகராயநகர் முத்துரங்கன் தெருவில் உள்ள, சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியில் குண்டு வெடிக்கப்போவதாக பெண் ஒருவர், அதே கல்லூரிக்கு போனில் பேசினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய தீவிர சோதனையில், ஜெயின் கல்லூரியில் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. கல்லூரி உட்பட இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெயின் கல்லூரிக்கு பெண் குரலில் பேசியதாக ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப் பட்டனர். இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் திரிபாதி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலில் புதிய திருப்பமாக ஜெயின் கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட மாணவி எதற்காக தனது கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கைது செய்யப் பட்ட எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications