Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5வது நாளாக நீடிக்கும் லாரி ஸ்டிரைக்.. கோயம்பேட்டில் காய்கறி விலை விர்ர்ர்!!

தென்னிந்திய லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 5வது நாளை எட்டியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய லாரிகள் வேலைநிறுத்தம் இன்று 5வது நாளை எட்டியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு உள்ளட்டவற்றை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

Chennai koyambedu Market Vegetables rate has increased due to Lorry strike

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 5வது நாளை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் வருவது வழக்கம்.

லாரிகள் வேலைநிறுத்தத்தால் காய்கறிகள் ஏற்றிவரும் 350 லாரிகளின் எண்ணிக்கை தற்போது 200ஆக குறைந்துள்ளது. காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் இல்லத்தரசிகள் காய்கறிகள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+