ஊதிய உயர்வு வழங்கியதில் அநீதி.. மெட்ரோ ரயில் ஊழியர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் இன்று மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெட்ரோ ரயில் ஊழியர்கள் இன்று மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வில் அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து கடந்த சனிக்கிழமை அன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திங்கட்கிழமையான இன்று உயரதிகாரிகளிடம் பேசி தீர்க்கலாம் என்று நிர்வாகம் கூறியதன் அடிப்படையில் சனிக்கிழமை போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.

இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு போனபோது, ஊழியர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் முற்றிலும் நிராகரித்து விட்டது. இதைத்தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக அலுவலகம் எதிரில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தை மெட்ரோ ரயில் ஊழியர்கள் துவங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications