வற்றும் சென்னை ஏரிகள் – கிருஷ்ணா நீர் கேட்டு ஆந்திராவிற்கு தமிழகம் கடிதம்
சென்னை: சென்னை நகர மக்களின் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் கிருஷ்ணா அணையின் தண்ணீரைக் கேட்டு தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை நகரத்தைப் பொறுத்த வரை குடிநீர் விநியோகம் புழல், வீராணம் போன்ற ஏரிகளில் இருந்துதான் பெரும்பாலும் கிடைத்து வருகின்றது. இதுபோக இரண்டு இடங்களில் கடல் நீரில் இருந்து குடிநீர் திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றது.
தற்போது குடிநீர் ஆதார ஏரிகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வறண்டு வருவதால் வீராணம் ஏரி தண்ணீர்தான் கை கொடுக்கிறது.
ஏரிகளில் தண்ணீர் கடுமையாக குறைந்து வருகின்ற காரணத்தால் ஆந்திர அரசுக்கு தமிழகஅதிகாரிகள் கடிதம் எழுதி ஜூலை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் மழை பெய்யாதது போல் ஆந்திராவிலும் இப்போது மழை இல்லை. இதனால் ஆந்திர அதிகாரிகள் ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகுதான் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்வார்கள் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை ஏரிகளில் 3 மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது. கிருஷ்ணா நீர்வரத்து கிடைத்தால்தான் அதன்பின்னர் சமாளிக்க முடியும் என்று தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications