சென்னை முதல் நெல்லை வரை.... சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை: நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி விட்டது. மேலும், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டதால் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்ப்போர் தங்கள் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அதேபோல் தென்மாவட்டங்களில் உள்ளவர்கள் விடுமுறையை கொண்டாட சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே விடுமுறையை கணக்கிட்டு அனைத்து டிக்கெட்டுக்களையும் பயணிகள் முன்பதிவு செய்து விட்டதால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யவும் பலர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதை கவனத்தில் கொண்டு நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 8, 14, 19, 24 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் 9, 15, 20, 25 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 18 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் குறித்த விவரம்:
ரயில் எண் 06021: மே 8 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06025: மே 14 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06026: மே 15 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 06027: மே 24 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06028: மே 25 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரயில் எண் 06022: மே 9 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
ரயில் எண் 06023: மே 19 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06024: மே 20 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்:
ரயில் எண் 06029: மே 17 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06030: மே 18 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம். விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications