Breaking News: காவிரி மேலாண்மை வாரியம்- மத்திய அரசுக்கு மே 14 வரை சுப்ரீம்கோர்ட் கால அவகாசம்!!
டெல்லி; காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மே 14-ந் தேதிவரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.
போர்க்களமான சென்னை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் சென்னை அண்ணாசாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணாசாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நகரில் 6000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு, தனியார் பேருந்துகள், வேன்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்: