சென்னை ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாா் வாவ்ரிங்கா !
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் வாவ்ரின்கா போர்னா கோரிக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 20வது சென்னை ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த ஒற்றையர் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, தனது நண்பரான 19-ம் நிலை வீரர் பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா, எதிர்பார்த்தது போலவே தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெனோய்ட் பேரை சுலபமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார் வாவ்ரிங்கா.
மற்றொரு அரையிறுதியில் போர்னா கோரிச் 7-6 (5), 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் பெடேனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். சென்னை ஓபனில் நீண்ட நேரம் நடந்த ஆட்டங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.
19 வயதான போர்னா கோரிச், சென்னை ஓபன் இறுதிப்போட்டியில் வாவ்ரிங்காவை எதிர்கொள்ள விரும்புவதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடியிருந்தார். அவரது ஆசைப்படியே இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் அவர் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் சென்னை ஓபன் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications