வெள்ளத்தில் மீட்க வராத கவுன்சிலர்கள் மீது அடங்கா கோபத்தில் பொதுமக்கள்... தப்பி ஓடி தலைமறைவு!!
சென்னை: பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த தங்களை மீட்க வராத பகுதி கவுன்சிலர்கள் மீது சென்னை பொதுமக்கள் கடும்கோபத்தில் உள்ளனர். இதனால் சென்னையில் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.
வரலாறு காணாத கனமழை, அடையாறு, கூவம் ஆறுகளின் வெள்ளமானது சென்னை பெருநகரத்தை அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டது. வழக்கமாக கரையோர மக்கள்தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர்.

ஆனால் இம்முறை சென்னையின் பல பகுதிகளிலும் பல அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பெரும்பகுதியான மக்கள் வீடுகளை மட்டுமல்ல.. அரும்பாடுபட்ட வாங்கி வைத்த அனைத்து பொருட்களையும் பறிகொடுத்துவிட்டனர்.
ஒரே இரவில் ஏதுமற்றவர்களாகிப் போனதால் அவர்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்... இப்படி பெருந்துயரத்தில் இருந்து தங்களை மீட்க கவுன்சிலர்களோ எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ உடனடியாக ஓடிவரவில்லை என்ற கோபத்தில் மக்கள் உள்ளனர்.
அதுவும் யார் யாரோ தன்னார்வலர்கள் வீடு தேடி வந்து நிவாரணப் பொருட்களை கொடுக்கும் போது எதற்கெடுத்தாலும் கமிஷன் அடித்து கோடீஸ்வரர்களாகிப் போன இந்த கவுன்சிலர்கள் எட்டிகூட பார்க்கவில்லை... அட குடிக்கக் கூட தண்ணீர்கொடுக்கவில்லையே என்ற பெருங்கோபத்துடன் இருக்கிறார்கள் பொதுமக்கள்.
இதனால் பல இடங்களில் கவுன்சிலர்கள் வீடு முற்றுகையிடப்பட்டு வீட்டுக்குள் பதுங்கியிருந்தவர்களை இழுத்து வந்து இடுப்பளவு வெள்ளத்தில் பார்வையிட வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எழுப்புகிற முதல் கேள்வி,, ஓட்டுக் கேட்க வந்தீங்கதானே.. இப்ப சாகப்போறப்ப ஏன் வந்து பார்க்கலை என்பதுதான்..
மக்களின் இந்த கோபம் நீண்டநாட்கள் தகிக்கவே செய்யும்!












Click it and Unblock the Notifications