For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஏடிஎம் மிஷினை கடப்பாரையால் உடைத்த கொள்ளையர்கள்.. வளைத்து பிடித்த போலீஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மிஷினை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க நடந்த முயற்சியை போலீசார் முறியடித்துள்ளனர். கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, தாம்பரம் அருகேயுள்ள அனகாபுத்தூர் பாலாஜி நகர் 14 தெருவில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மிஷின் உள்ளது. நேற்றிரவு அந்த ஏடிஎம் உடைக்கப்படும் சப்தம் கேட்டுள்ளது. இதுபற்றி, ஏரியா மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

Chennai police arrested 4 persons who try to break SBI Atm machine

தகவல் கிடைத்ததும், சங்கர் நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது இருவர் கடப்பாரையால் ஏடிஎம்மை உடைப்பது தெரியவந்தது. அப்போது அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரை கொள்ளையர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கடும்போராட்டத்திற்கு பிறகு இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துவந்து விசாரித்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளைக்கு உடந்ததையாக இருந்த மேலும் இருவரை கைது செய்தனர்.

English summary
Chennai police arrested 4 persons who try to break SBI Atm machine near Tambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X