மீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டை.. 13 ரவுடிகள் உள்பட 94 பேர் கைது
மீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 ரவுடிகள் உள்பட 94 பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை அருகே மீஞ்சூரில் போலீஸார் விடிய விடிய நடத்திய அதிரடி சோதனையில் 13 ரவுடிகள் உட்பட 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உள்ள ரவுடிகள் சிலர் சென்னை புறநகர் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்திக்கு வந்த ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, மீஞ்சூர் பகுதியில் நேற்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ,போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தினர்.

தேடுதல் சோதனையில், 1 ஒரு எஸ்பி, 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 7 இன்ஸ்பெக்டர்கள், 212 காவலர்கள் என மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, சென்னை புறநகர் பகுதிகளான வல்லூர், பட்டமந்திரி, வடசென்னை அனல் மின் நிலையம், மணலி ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகப்படும் வகையில் இருந்த 94 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் கிரிமினல் கிரைம் டிராக்கிங் நெட்வொர்க் என்ற சோதனையின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. அதன்படி, கைதானவர்களில் 13 பேர் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு 76 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த 13 ரவுடிகளில் தனுஷ், சூர்யா, ஷோபன்பாபு உள்ளிட்ட ரவுடிகளும் அடங்குவர். இவர்களை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு பூந்தமல்லி பகுதியில் ரவுடி பினுவின் கூட்டாளிகள் 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.இதே போல, திருவள்ளூரில் 53 ரவுடிகளை போலீஸார் திடீர் சோதனை மூலம் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications