சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை நீடிப்பதால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று 5வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டிவருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

Chennai Rain : Holiday declared to schools

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி இருப்பதால் புறநகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்னும் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவித்துள்ளதாலும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+