சென்னையை உலுக்கிய வெள்ளம்... 50,000 பேர் வேலையிழந்த பரிதாபம்!
சென்னை: சென்னையில் பெய்த பெரும் மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக விரிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்கள் இந்த வெள்ளம் காரணமாக வேலையை இழந்துள்ளனராம்.
சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், வீடுகள் மட்டுமல்லாமல் பல தொழில் நிறுவனங்களுக்கும், இந்த வெள்ளத்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனவாம். அதில் 95 சதவீத நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகும்.

50000 ஊழியர்கள்...
இந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த 50,000 பேருக்கு தற்போது வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

நஷ்ட மதிப்பீடு...
வெள்ளத்தால் ஏற்பட்ட தொழில் பாதிப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் நஷ்ட மதிப்பீடு தயாராகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை...
நிதியமைச்சருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நேரில் ஆய்வு...
முன்னதாக சமீபத்தில் சென்னை வந்திருந்த மிஸ்ரா, தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications