பெரும் வெள்ளத்தில் சென்னைவாசிகளுக்கு கைகொடுத்தது மெட்ரோ ரயில்தான்.....
சென்னை: கனமழை வெள்ளத்தால் ரயில், சாலை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு சென்னை மாநகரமே தனித் தனி தீவுகளாக வெட்டிவிடப்பட நிலையில் சென்னைவாசிகளுக்கு பலவகையிலும் கொடுத்தது மெட்ரோ ரயில்தான்.
சென்னையில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட போது கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டனர் பொதுமக்கள். ஆனால் கடந்த வாரம் சென்னையை மூழ்கடித்த பெருமழை வெள்ளத்தால் சாலைப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டது.

சென்னை புறநகர் ரயில் சேவையும் வெளியூர்களுக்கான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அந்த நாட்களில் சென்னை மாநகர மக்களுக்கு கை கொடுத்தது மெட்ரோ ரயில்தான். சில ஆயிரம் பேர்தான் பயணித்துக் கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் கடந்த வாரம் வெள்ள பாதிப்பின் போது சராசரியாக நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரையும் பயணித்திருக்கிறார்கள்.
மெட்ரோ ரயில்தான் சென்னைவாசிகளுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்த ஒரே போக்குவரத்தாக இயங்கியது. அதிலும் சிலர் சென்னை வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவும் மெட்ரோ ரயிலில் பயணித்தனர்..
ஆனால் பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக விமானத்தை பிடிக்க, ரயில் நிலையங்களுக்கு செல்ல போராடியவர்களே...
காப்பாற்றிய மெட்ரோ சுரங்க பாதை...
அத்துடன் சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதைதான் பெரும்பகுதி வெள்ளத்தை உள்வாங்கியது. இதன் பின்னரே அது நந்தனம் மற்றும் தி.நகருக்குள் ஊடுருவியது.
இந்த மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை மட்டும் இல்லாமல் இருந்தால் தி.நகரும், நந்தனமும் பெரும் பேரழிவையே சந்தித்திருக்கும்.
நல்லவேளை கருணாநிதி கொண்டுவந்த மெட்ரோ ரயில் திட்டம் என்பதற்காக இதை மூடிவிட்டு மோனோ ரயிலை கொண்டுவருகிறேன் என அடாவடி காட்டாமல் விட்டது அ.தி.மு.க. அரசு. அப்படி புதிய தலைமைச் செயலகம் போல, அண்ணா நூலகம் போல இந்த மெட்ரோ ரயிலையும் ஆளும் அ.தி.மு.க. அரசு மூடியிருந்தால் சென்னைவாசிகளின் நிலையை நினைத்துபார்க்கவே முடியாது.. சென்னை சைதாப்பேட்டையும் தி.நகரும் நந்தனமும் சென்னை வெள்ளத்தின் எச்சமாக நினைவுகளை மட்டுமே தாங்கிய இன்னொரு தனுஷ்கோடியாகியிருக்கும்....
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications