தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்டிட விபத்து : தேசிய பேரிடர் மீட்புக் குழு
சென்னை: போரூரில் நேற்று 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தான் இதுவரை தென்னிந்தியாவில் நடந்த மிகப்பெரிய கட்டிட விபத்து என தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தக் கட்டிட விபத்து தான் சென்னையில் இதுவரை நடந்த கட்டிட இடிபாடு விபத்துகளில் மிகவும் பெரியது எனக் கூறப்படுகிறது.

அடுக்குமாடிக் கட்டிடங்கள்...
சென்னையின் புறநகர் உட்பட அனைத்து பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் அதிகரித்து வருகின்றன.

சொந்தவீடு கனவு...
நடுத்தரவர்க்கத்தினர் பலர் அதிகரித்து வரும் வாடகைக்குப் பயந்து சொந்த வீடு வாங்க விரும்புவதே இந்த அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு முக்கியக் காரணம் எனலாம்.

அதிகரிக்கும் தேவை..
தேவையின் காரணமாக பழைய வீடுகள் கூட இடித்து புதிய அடுக்குமாடிக் கட்டடங்களாக உருமாறி வருகின்றன. இதனால் அருகருகே தொடர் அடுக்குமாடிகள் அமைக்கப் படுகின்றன.

முதல் விபத்து...
இந்நிலையில், நேற்றைய விபத்து போன்று சம்பவம் இதுவரை சென்னையில் நடைபெற்றது இல்லை என்றும், இது தான் முதல் கொடூர விபத்து எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications