For Daily Alerts
Just In
துணிக்கடையில் ‘கண்காணிப்பு கேமராவை’ திருடிய டெய்லர்... கடை உரிமையாளர் போலீசில் புகார்
சென்னை: சென்னை துணிக்கடை ஒன்றில் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா மற்றும் மானிட்டரை திருடியதாக, அதே கடையில் வேலை பார்க்கும் டெய்லர் மீது கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, புரசைவாக்கம் ஆரியப்பன் லேனில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில், கடை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் காட்சிகள் பதிவாகும் மானிட்டர் திருடப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கடையின் உரிமையாளர் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர், ‘தனது கடையில் வேலை பார்க்கும் டெய்லர் அசோக் என்பவர், கடையின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமரா மற்றும் காட்சிகள் பதிவாகும் மானிட்டரை திருடிச் சென்றதாக' அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருட்டு குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வாக்குப்பதிவு செய்து தலைமறைவான அசோக்கை தேடி வருகிறார்கள்.
English summary
A shop owner in Chennai Purasaivakkam filed a complaint with police that one of his staff has stolen a CCTV camera from the shop.
Story first published: Monday, November 17, 2014, 18:25 [IST]