For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் கட்டணத்தை வாபஸ் பெறு...சென்னையில் மாணவர்கள் மனிதச்சங்கிலி பேரணி

உயர்த்தப்பட்ட பேருந்துக்கட்டணத்தை திரும்ப பெறக்கோரி சென்னையில் கவின்கலைக்கல்லூரி மாணவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சென்னையில் கவின்கலைக்கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Students human chain protest against bus fare hike

அரசுக்கு எதிராக பஸ் பயணிகள் கடும் சாபம் கொடுத்து வருகின்றனர். கூடுதல் கட்டணம் கேட்டும் கண்டக்டரை அடிக்கப் பாய்கின்றனர் சிலர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு இடையே கல்லூரிக்கு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூரில் கவின்கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று பதாகைகளுடன் மனிதசங்கிலி பேரணியில் ஈடுபட்டனர். பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

English summary
TamilNadu government arts college students to stage human chain protest against bus fare hike held on Monday. Tamil Nadu against the steep hike in bus fares announced by the State government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X