சென்னை மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்: புதிய நேரத்தை அறிவது எப்படி?- இதோ...!
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் 70 ரயில்களுக்கு பொருந்தும்.
மின்சார ரயில்கள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்ட்ரல்- திருத்தணி; கடற்கரை- திருத்தணி; சென்ட்ரல் - சூலூர்பேட்டை; கடற்கரை - சூலூர்பேட்டை இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பட்டாபிராம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் 26 மின்சார ரயில்களின் நேரமும் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய இடங்களுக்கும், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம்- செங்கல்பட்டு, செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் திருத்தணி மார்க்கத்தில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மின்சார ரயில்கள் தற்போதுள்ள நேரத்தை விட 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும். சில மின்சார ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
இந்த புதிய காலஅட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ரயில்களின் புதிய நேரத்தை அறிய...