தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.... எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை : ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுவதால் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ள நிலையில் வானிலைஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் வரும் தினங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்டமாக 6 டிகிரிவரை வெப்பநிலை அதிகரித்ததாக கூறிய அவர், நாளை தொடங்கி 28ம் தேதிவரை அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரிவரை உயர வாய்ப்புள்ளது என்று கூறினார்.
கடலோர மாவட்டங்களில் காற்றின் திசையை பொறுத்து வெப்பநிலை மாறுபடும் என்று தெரிவித்தார். சென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய அவர் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications