For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் பாதிக்கப்பட்ட தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாவரம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மின்சார ரயில் இயக்கம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பலத்த காற்றும் வீசிவருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் காலை நிலவரப்படி, 30 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Chennai: Train transport affected after a tree fall down on the track

பல்லாவரம் அருகே, மின்சார ரயில் தண்டவாளத்திலும் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனால் தாம்பரம்-கடற்கரை நடுவேயான மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில்கள் இயக்கப்பட்டன. அமைச்சர்கள் வளர்மதி, வேலுமணி உள்ளிட்டோர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டனர்.

English summary
Train transport affected after a tree fall down on the track near Pallavaram, in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X