உஷாரய்யா, உஷாரு! சென்னை மாநகர பஸ்களில் கைவரிசை காட்டும் சேலம் 'பெண் பிக்பாக்கெட்' கும்பல்!
சென்னை: தலைநகர் சென்னையில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளனர். கைதானவர்களில் பெரும்பாலான பெண்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
'பிக்பாக்கெட் ஜாக்கிரதை' என்று டவுன் பஸ்களுக்குள் எழுதிப்போடும் அளவுக்கு சென்னையில் திருட்டு தலைவிரித்தாடி வருகிறது. பிக்பாக்கெட் என்றாலே, கன்னத்தில் மச்சம், கழுத்தில் கர்ச்சீப், கைலி கட்டிக் கொண்டு வருவார்கள் என்பதெல்லாம் திரைப்படத்தோடு சரி. நிஜத்தில் டிப்-டாப்பாக, ஷூவெல்லாம் மாட்டிக் கொண்டு வந்துதான் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.

தொழிலில் குதித்த பெண்கள்
எனவே, எந்த ஒரு ஆண் பக்கத்தில் நின்றாலும் சக பயணிகள் அடிக்கடி பர்சை தொட்டுப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்கின்றனர். ஆனால் அந்த நிம்மதியையும் கெடுக்க, பிக்பாக்கெட் 'தொழிலில்' பெண்களும் குதித்துவிட்டனர். இதுவரை பஸ்சில் இடிப்பதற்காக பெண்களிடம் நெருங்கிய ஆண்கள், இப்போது பிக்பாக்கெட்டுகள் புண்ணியத்தால், விட்டால் போதும் என்று ஒதுங்கிக் கொள்கின்றனர்.

கையும் களவுமாக கைது
சில தினங்களுக்கு முன்பு ஒரு சம்பவம். குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், துர்கா நகரை சேர்ந்தவர் சவுந்தரி (32). இவர், பல்லாவரம் அருகே பஸ்சில் சென்றபோது, இவருடையே கைப்பையில் இருந்து ஒரு பெண் ரூ.7 ஆயிரத்தை திருடினார். இதை கண்ட சக பயணிகள், அந்த பெண்ணை பிடித்து பல்லாவரம் போலீசில் ஒப்படத்தனர். விசாரணையில் அவர் பெயர் கோகிலா (29) என்பது தெரியவந்தது.

கைப்பை போச்சு
கடந்த திங்கள்கிழமை மாலையில் மற்றொரு சம்பவம் இதேபோல நடந்துள்ளது. தியாகராய நகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ் பரங்கிமலை பட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது 2 பெண்கள் ஒரு கை பையுடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். அப்போது பஸ்சுக்குள் இருந்து எனது கைப்பையை காணோம் என்று ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது.

விரட்டி பிடித்த பெண் போலீசார்
நல்லவேளையாக பஸ் நிறுத்தத்தில் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த பெண் கான்ஸ்டபிள்கள் இரண்டுபேர் நின்று கொண்டிருந்தனர். நடந்தவற்றை யூகித்துக் கொண்ட பெண் போலீசார், பிக்பாக்கெட் அடித்துவிட்டு இறங்கி ஓடிய இரு பெண்களையும் பிடித்து பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இளம் பெண்கள்
போலீசார் நடத்திய சோதனையில் 2 பெண்களிடமும் இருந்து ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பெண்களும் பஸ்களில் ஏறி பயணிகளிடம் இருந்து கைப்பை, பணம் ஆகியவற்றை திருடி வருவது தெரிய வந்தது. இதில் ஒரு பெண்ணின் பெயர் ஜோதி (27), மற்றொரு பெண் ஜமுனா (29) என்றும் தெரிய வந்துள்ளது.

சேலம் கும்பல்?
இதில் விஷயம் என்னவென்றால், இரு சம்பவங்களிலுமே கைது செய்யப்பட்ட பெண்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். சேலத்தை சேர்ந்த ஒரே கும்பல்தான் இந்த பிக்பாக்கெட்டுகளில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இனிமேலாவது பயணிகள் பெண் பிக்பாக்கெட்டர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications