சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிப்பு... உஸ்மான் சாலை போக்குவரத்து எப்போது தொடங்கும்? - வீடியோ
தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்த சென்னை சில்க்ஸின் 7 மாடிக் கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வருவதால், உஸ்மான் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இடிப்புப் பணி முடிந்ததும் போக்குவரத்து அனுமதிக்கப
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் நெருப்புக்கு இரையானதைத் தொடர்ந்து இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டடம் இடிக்கும் பணி முழுவதுமாக நிறைவடைந்த பிறகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், ஜூன் 1ஆம் தேதி அதிகாலையில் சென்னை சில்க்ஸ் கட்டடம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள், 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 27 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

தீயில் பற்றி எரிந்ததால் கட்டடம் பலமிழந்துவிட்டதையடுத்து அதை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். சைதாப்பேடையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டடம் இடிக்கும் பணியைக் கொடுத்தனர். அந்த நிறுவனம் தற்போது சென்னை சில்க்ஸின் 7 மாடிக் கட்டடத்தை இடித்து வருகிறது.
தற்போது கட்டடம் இடிக்கப்பட்டு வருவதால் கடந்த சிலநாட்களாக உஸ்மான் சாலை போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கும் பணி முழுவதுமாக நிறைவடைய நான்கு நாட்கள் ஆகும். அதன்பிறகே உஸ்மான் சாலையில் வழக்கம் போல்போக்குவரத்துக்கு அனுமதியளிக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications