சென்னை வன்முறையால் பாதிக்கப்பட்டவரா?.. இந்த எண்களில் உடனே புகார் கொடுங்க
சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என்று நீதிபதி மஞ்சுளா அறிவித்துள்ளார்.
சென்னை: திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் நேற்று முன் தினம் நடைபெற்ற வன்முறை தாக்குதலில் போது அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்ய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ம் தேதி, மெரினா கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது, திருவல்லிக்கேணியில் உள்ள நடுகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் வீடு வீடாகச் சென்று பெண்கள் மற்றும் ஆண்களை அடித்து உதைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு குழந்தைகளும் தப்பவில்லை. இதனால் பலருக்கு மண்டை உடைந்தது. பலருக்கு எலும்பு முறிந்தது. அவர்களை அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே மக்களை தாக்கியுள்ளதால், யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் நடுகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உடனே தமிழக மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்று நீதிபதி மஞ்சுளா அறிவித்துள்ளார்.
எனவே, தயவு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், புகார் மனு எதுவாக இருந்தாலும் [email protected] இந்த மின்னஞ்சலுக்கு தயக்கம் எதுவும் இன்றி அனுப்பி வைக்கலாம். மேலும், தொடர்புக்கு..
அவரது அலுவலக தொலைபேசி எண் : 24951492
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1486
மிஸ் பண்ணாதீங்க.. புகார் கொடுங்க..
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications