சென்னையில் 48 மணி நேரத்தில் இரவில் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம்
சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும். பகலில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், இரவில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது.

இந்த நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறுகையில் ஆந்திராவை ஒட்டிய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்.
சென்னையில் மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யும். பகல் நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications