எப்ப பார்த்தாலும் ஃபுல் போதை.. சதா சண்டை.. கடுப்பில் அமெரிக்க மனைவியை கைவிட்ட சென்னை இளைஞர்
Recommended Video

காஞ்சிபுரம்: அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாணத்தில் கைவிட்டு விட்டு சென்னை இளைஞர் தலைமறைவாகிவிட்டார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் கேலா மரீன் நெல்சன் (35). இவருக்கும் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இருவரும் வேளச்சேரியில் வீடு பார்த்து குடியேறினர். இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தன் மனைவியை விமல் இறக்கி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

காவல் துறை
போதையில் தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாணத்துடன் சுற்றித் திரிந்த அவரை கண்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பெண்கள் காப்பகம்
பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு அவருக்கு வேறு துணி உடுத்தி காவல்துறையினர் பாதுகாப்பில் வைத்துள்ளனர். பின்னர் வேளச்சேரி காவல் நிலத்திற்கு தகவல் தெரிவித்து சமூக நலத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

வேலை இல்லை
இதனிடையே சென்னையில் இவர்கள் குடியேறியதாக கூறப்படும் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு விமல் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதும் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் அவருக்கு வேலை போய்விட்டதும் தெரியவந்தது.

அமெரிக்கா
இதையடுத்து அமெரிக்க தூதரகத்திற்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அமெரிக்க தூதரகத்தினர் காவல்துறையினர் உதவியுடன் காப்பகத்தில் இருந்த பெண்ணை மீட்டு விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தனர்.

போதை
தலைமறைவாக உள்ள விமலை போலீஸார் தேடி வருகின்றனர். பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை அரை நிர்வாண கோலத்தில் கைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண் எப்போதும் போதையில் இருந்ததால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications