சிஏ பரீட்சையில் சென்னையின் ஜேம்ஸ் பிரிட்டோ அபாரம்.. நாட்டிலேயே முதல் மாணவராக தேர்ச்சி!
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ என்ற மாணவர், சிஏ எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
சமீப காலமாக சிஏ படிப்பின் மீது மாணவர்களுக்கு மோகம் அதிகரித்து வருகிறது. பலரும் இதில் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் - டிசம்பரில் நடந்த சிஏ தேர்வில் நாட்டிலேயே முதல் மாணவராக ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ என்ற சென்னை மாணவர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
Chennai youth tops CA final exams https://t.co/4YUQoh66DI pic.twitter.com/9v0zU8l4Zv
— Times of India (@timesofindia) January 17, 2016 23 வயதான பிரி்டடோ, 800க்கு 595 மதிப்பெண்களுடன், 74.38 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். திருப்பதியைச் சேர்ந்த மோகன்குமார் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அனினேஷ் சன்செட்டி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 5.75 சதவீதமாகும். இது கடந்த ஆண்டுகளை விட மிகக் குறைவாகும். சிஏ தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பதே மிகப் பெரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சாதனை குறித்து பிரிட்டோ கூறுகையில், முதல் முயற்சியிலேயே நான் தேர்ச்சி பெற்றுள்ளேன். இரண்டு குரூப் தேர்விலும் நான் ஒரே சமயத்தில் கலந்து கொண்டேன். இன்டர்மீடியேட் சமயத்தில் இரு குரூப்களிலும் தனித் தனி்யாக எழுதினேன் என்றார்.
பிரிட்டோவின் தந்தை ஒரு ஆடிட்டர் ஆவார்.












Click it and Unblock the Notifications