சேத்துப்பட்டு ஏரி படகு சவாரி, பசுமைப் பூங்கா, அம்மா கைபேசி திட்டம்.. தொடங்கி வைத்தார் ஜெ.
சென்னை: சென்னையில் புதிய சுற்றுலாத்தலமாக சேத்துப்பட்டு ஏரியினை அறிவித்து பசுமைப் பூங்காவினையும், படகு சவாரியையும் இன்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக மெரினா கடற்கரை இருக்கிறது. ஆனால், படகு சவாரி செய்ய விரும்புபவர்கள், மாமல்லபுரம் அருகேயுள்ள முட்டுக்காடு சுற்றுலா தலத்திற்குத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தற்போது படகு சவாரி வசதியும் சென்னை மாநகரின் மைய பகுதிக்குள்ளேயே வந்து விட்டது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தூண்டில் மீன்பிடி தளம், 1.5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதை, மீன்கள் கண்காட்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பெரிய ஹோட்டல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தயார் நிலையில் உள்ள சேத்துப்பட்டு ஏரி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த வசதிகள் இன்று திறந்து வைக்கப்பட்டவுடன் பொதுமக்கள் ஏரியில் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேத்துப்பட்டு ஏரிக்கு தெற்கு பகுதியில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதேபோல் வடக்கு பகுதியில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளது. ஏரியில் படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூபாய் 50ம், சிறியவர்களுக்கு ரூபாய் 25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000 மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுனர்களுக்கு வழங்க இருக்கும் "அம்மா கைபேசி" திட்டத்தினையும் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அலுவலர் குடியிருப்புகள்:
மேலும், சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் 100 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.42 ஏக்கர் நிலத்தில், 6,57,020 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான "சி-வகை" 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications