சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்- காலவரையற்ற விடுமுறை
மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கடலூர் : கடலூர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவக்கல்லூரி அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது மாணவர்கள் புகார்.

மாணவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் இருந்து பணம் பெறுவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கல்லூரி வாயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாணவர்கள் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இன்று முதல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications