குல தெய்வ கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு பட்ஜெட் பணிகளை தொடங்கும் ப.சிதம்பரம்!
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக சிவகங்கை அருகே உள்ள தமது குலதெய்வ கோயிலில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாளை வழிபாடு நடத்த உள்ளார்.
பிப்ர்வரி 17-ந் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டுதோறும் தமது தாயார் லட்சுமி ஆச்சியிடம் ஆசி பெற்று பட்ஜெட் தயாரிப்பு பணிகளை சிதம்பரம் தொடங்குவார்.

ஆனால் அவர் காலமானதால் இம்முறை சிவங்கை அருகே உள்ள வையகருப்பர் சாமி கோயிலில் நாளை வழிபாடு நடத்துகிறாராம் சிதம்பரம். அதன் பின்னர் 2 நாட்கள் தமது ஆதரவாளர்களுடன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்துகிறாராம் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications