இரவோடு இரவாக தியாகி சிதம்பரநாதனின் சிலை அகற்றம்
நாகர்கோவில்: களியக்காவிளையில் இருந்த எல்லை போராட்ட தியாகி சிதம்பரநாதனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ரூ.5 லட்சம் மதிப்பில் தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் எல்லை போராட்ட தியாகி சிதம்பரநாதனின் சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலை துணியால் மூடப்பட்டு திறப்பு விழா காணாமல் இருந்தது.

இந்நிலையில் வரும் 27ம் தேதி அந்த சிலையை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் திறந்து வைப்பார் என்று காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டினர். மேலும் சிலையை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைக்க எடுக்கப்பட்ட முயற்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து காங்கிரஸ் கட்சியினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நள்ளிரவில் நவீன இயந்திரங்கள் உதவியுடன் சிலை அகற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications