18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும்? தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம்!
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஏன் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

தமிழக அரசின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் காலை முதலே எதிர்பார்ப்பு எகிறியது.
இந்நிலையில் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என கூறி தீர்ப்பளித்தார். 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.
ஆனால் மற்றொரு நீதிபதியான சுந்தர் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது ஏன் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்ததாக கூறியுள்ளார்.
சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications