கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ.. நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர் எடப்பாடியார்!
கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா எனக்கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கண்ணீர் விட்டார்
Recommended Video

சேலம்: கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா எனக்கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கண்ணீர் விட்டார்.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இதையடுத்து மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது காவிரி நீரை பெறுவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

இறுதிமூச்சு வரை போராடினார்
அப்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசித்தார் என்றார். தனது கடைசி மூச்சு வரை காவிரி நீரை பெற ஜெயலலிதா போராடினார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கண்ணீர் விட்ட முதல்வர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மிகவும் உருக்கமாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவரது குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கி கண்ணீர் விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

120 அடியை எட்டும்
காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது என்றும், மேட்டூர் அணை விரைவில் 120 அடியை எட்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

மேட்டூரில் நினைவு ஸ்தூபி
மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு ஸ்தூபியை கட்டவும், பூங்காவை மேம்படுத்தவும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி விவகாரத்தில் பெற்ற சட்டப்போராட்டத்தின் வெற்றிபெற்றதை வெளிப்படுத்தும் வகையில் நினைவு ஸ்தூபி அமைக்கப்படும்.

வண்டல் மண் எடுக்கலாம்
கடைமடை வரை நீர் செல்லும் அளவுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் குறையும் போதும் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications