கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ.. நா தழுதழுத்து கண்ணீர்விட்ட முதல்வர் எடப்பாடியார்!
கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா எனக்கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கண்ணீர் விட்டார்
Recommended Video

சேலம்: கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா எனக்கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கண்ணீர் விட்டார்.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இதையடுத்து மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது காவிரி நீரை பெறுவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

இறுதிமூச்சு வரை போராடினார்
அப்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசித்தார் என்றார். தனது கடைசி மூச்சு வரை காவிரி நீரை பெற ஜெயலலிதா போராடினார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கண்ணீர் விட்ட முதல்வர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மிகவும் உருக்கமாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவரது குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கி கண்ணீர் விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

120 அடியை எட்டும்
காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது என்றும், மேட்டூர் அணை விரைவில் 120 அடியை எட்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

மேட்டூரில் நினைவு ஸ்தூபி
மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு ஸ்தூபியை கட்டவும், பூங்காவை மேம்படுத்தவும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி விவகாரத்தில் பெற்ற சட்டப்போராட்டத்தின் வெற்றிபெற்றதை வெளிப்படுத்தும் வகையில் நினைவு ஸ்தூபி அமைக்கப்படும்.

வண்டல் மண் எடுக்கலாம்
கடைமடை வரை நீர் செல்லும் அளவுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் குறையும் போதும் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications