பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.. செந்தில்பாலாஜி கணிப்பு
பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: பிப்ரவரி மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிச்சாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் ஆவர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவராக உள்ளார்.
இவரும் தனது தலைமைக்கு போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுவரை டிடிவி தினகரன் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியின் அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என என கூறி வந்தார்.

பிப். இறுதிக்குள் வீட்டுக்கு
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி மாத இறுதிக்குள் கூவத்தூர் பழனிசாமி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கூவத்தூர் பழனிச்சாமி
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கூவத்தூர் பழனிச்சாமி என விமர்சித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றும் போக்குவரத்துத் துறையை வருமானத்தின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பகீர் குற்றச்சாட்டு
1000 பேருந்து வழித்தடங்களை ஒருசில முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகு தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மீண்டும் பெறுவோம்
அதிமுகவிலிருந்து நிர்வாகிகளை தன்னிச்சையாக நீக்குவது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் அதிகாரத்தால் பெறப்பட்ட சின்னத்தையும் கட்சியையும் மீண்டும் பெறுவோம் என்றும் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications